thaai madiyil thavazhukinra தாய் மடியில் தவழுகின்ற
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
1.கவலையில்லையே கலக்கம் இல்லையே-2
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2
எதைக் குறித்தும் பயமில்லையே-2
என் நேசர் நடத்துகிறீர் (தினம்)-2
2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2
நன்றியோடு துதிக்கிறேன் (நான்)-2
கைவிடாத என் ஆயனே (என்னை)-2
கல்வாரி நாயாகனே-2
3.துணையாளரே துணையானீரே -2
இணையில்லா மணவாளரே (என்)-2
உணவாக வந்தீரையா-2
உயிரோடு கலந்தீரையா (என்)-2
4.உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்-2
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2
உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே-2
உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)-2
5.அதிகாலமே தேடுகிறேன்-2
ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்)-2
உயிர்வாழும் நாட்களெல்லாம்-2
உம் நாமம் சொல்வேனையா (நான்)-2
6.படுக்கையிலும் நினைக்கின்றேன்-2
இராச்சாமம் தியானிக்கின்றேன்-2
உம் அன்பு போதுமையா-2
உயிரினும் உயர்ந்தையா-அது-2