thalaiva unai vananka தலைவா உனை வணங்க – என்
தலைவா உனை வணங்க – என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க – நான்
சிரமே தாள் பணிந்தேன்
அகல்போல் எரியும் அன்பு – அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன் – 2
நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் – 2