thanthen yennai yesuve – தந்தேன் என்னை ஏசுவே
Thanthen Yennai Yesuve
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்
2. உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்
3. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்
4. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்
5. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்