theevinai seiyathe maa sothanaiyil தீவினை செய்யாதே மா சோதனையில்
தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்
வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான்
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்