thirukkulamae elunthiduga arul poliyum திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே – 2
ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் – 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் – 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்