vinnoerkal panpaata innaalil ஆ…ஆ…ஆ
ஆ….ஆ….ஆ
விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |
கன்னி மரி ஈன்ற மகன் |
மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2
அன்பாய் வந்த தேவ சுதன் |
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
ஆலயம் கூடுவோம்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
ஆனந்தம் பாடுவோம்
விண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல |
பொன் வேந்தர் வழி கண்டாரே |
பாலன் முகம் கண்டு பணிந்து | 2
காணிக்கை முன் வைத்தாரே |
நெஞ்சங்கள் போற்ற நம் யேசு
பாலன் பொற்பாதம் பணிந்திடுவோம்
நீதியின் தேவன் தோன்றி விட்டரே
அவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…)
ஒளியாக உலகத்தில் வந்தார் |
உள்ளத்தில் அமைதி தந்தார் |
இருள் நீங்கி அருள் வாழ்வு மலர | 2
இந்நிலம் தேடி வந்தார் |
துன்பங்கள் போகும் இன்பங்கள் சேரும்
இறைமகன் பிறந்து விட்டார்
மானிடர் நம்மை விண்ணோராய் மாற்ற
மனுமகன் தோன்றி விட்டார் (விண்ணோ..)