yesuvaip pinpattum manitharkal yaar இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்