kadal konthalithaalum கடல் கொந்தளித்தாலும்
கடல் கொந்தளித்தாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
நீரே நீரே ராஜா
வானங்கள் அகன்றாலும்
பூமி ஒழிந்தாலும்
நீரே நீரே ராஜா
ராஜாக்கெல்லாம் நீரே ராஜா
எல்லா ராஜ்யங்களிலும் நீரே ராஜா
ஆளுகை செய்யும் நீரே ராஜா
எங்களை ஆசீர்வதிக்கும் நீரே ராஜா
வானங்கள் மேலும் நீரே ராஜா
பூமியின் மீதும் நீரே ராஜா
சேனையின் கர்த்தர் நீரே ராஜா
போற்றி பாட தக்க நீரே ராஜா
நித்யமானவர் நீரே ராஜா
முடிவில்லாதவர் நீரே ராஜா
எல்லா ஞானமுள்ளவர் நீரே ராஜா
சகல மகிமை உடையவர் நீரே ராஜா