maranatha yesuvae varumaiya மாரநாதா இயேசுவே வாருமையா
மாரநாதா இயேசுவே வாருமையா
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே
ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே
நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே
திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே