ondrum thaanai varala ஒன்றும் தானாய் வரல
ஒன்றும் தானாய் வரல எல்லாம்
கிருபையால் வந்தது
பல்லவி
கிருபை கிருபையே தேவ கிருபையே
என்னை வாழ வைத்ததும் தேவ கிருபையே
1. தோற்றுப் போன இடத்தில்
ஜெயத்தை தந்ததே
சேர்ந்திடாமலே என்னை நிற்க செய்ததே – 2
கிருபை…
2. மலைகள் விலகினாலும்
மனிதர்கள் மாறினாலும் மாறும்
இவ்வுலகில் உம் கிருபை மாறவில்லை -2
கிருபை…
3. தகுதியில்லாத என்னையும் அழைத்தீரே ஊழியத்திலே
என்னையும் உயர்த்தினதே -2
கிருபை…