manukulatha kaaka vandha maga rajanae மனுகுலத காக்க வந்த மகா ராஜனே
மனுகுலத காக்க வந்த மகா ராஜனே
இந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2
எந்தன் பாவங்களை போக்க வந்தவரே
எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2
மகிமையின் தேவன் நீர் தானே
அந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2
மாட்டு தொழுவத்துல பிறந்தீரே
எங்க மனசுல குடியேற வந்தீரே -2
உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்
நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2
பாவ இருள் இங்க பயந்து போகுதே
எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே -2
பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே
எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே -2
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2