baalanaai yesu baalanaai பாலனாய் இயேசு பாலனாய்
பாலனாய் இயேசு பாலனாய்
பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்
பாசமாய் பாவ மீட்பராய்
மண்ணிலே ஏழ்மையாய்
விண்ணையே விட்டு வந்தார்
பாலனாய் இயேசு பாலனாய்
1. தேவ தூதர்கள் வானில் தோன்ற
ஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)
ஞானிகள் பாலனை பணிந்திடவே
கிறிஸ்மஸ் வந்ததே
2. இழந்து போனதை தேடி மீட்க
சர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)
சரித்திரம் படைத்திடும் நாயகராய்
இரட்சகர் பிறந்தாரே
3. மானிடரின் மேல் அன்பை ஊற்ற
காயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)
கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவே
மேசியா பிறந்தாரே
4. எங்கள் வாழ்விலே உம்மை காண
உமது இல்லத்தின் பங்காய் மாற
அல்லேலூயா (4)
தியாகமாய் வந்தவரை சொல்லிடவே
உள்ளத்தில் பிறந்தாரே