parathukeru munnamae பரத்துக்கேறு முன்னமே
பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்
விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்
அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்
நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்
ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து
நெஞ்சிலே நீர் தங்கிடும்