pandikai naal magil பண்டிகை நாள் மகிழ்
பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்
வென்றுயிர்த்தோரைப்
போற்றிப் பாடுவோம்
பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்
அருளாம் நாதர்
உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர் விடும்
நல் வசந்தம்
பூலோகெங்கும்
நறுமலர் மணம்
மேலோகெங்கும்
மின் ஜோதியின் மயம்
முளைத்துப் பூக்கும்
பூண்டு புல்களும்
களிப்பாய் கர்த்தர்
ஜெயித்தார் என்னும்
சாத்தான் தொலைந்ததால்
விண்மன், ஜலம்
கீர்த்தனம் பாடிக்
களி கூர்ந்திடும்
குருசினில் தொங்கினோர்
நம் கடவுள்
சிருஷ்டி நாம்
தொழுவோம் வாருங்கள்
அநாதி நித்திய
தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு
ரட்சித்தார்
நரரை மீட்க
நரனாய் வந்தார்
நரகம் சாவு பேயையும்
வென்றார்
பிதா சுதன்
சுத்தாவிக்கென்றும்
துதி புகழ் கனமும்
ஏறிடும்