nenjame thuthi paadidu நெஞ்சமே துதி பாடிடு
நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு
1. பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்
2. வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்