thoodhar kootam paatu paadavae தூதர் கூட்டம் பாட்டு பாடவே
தூதர் கூட்டம் பாட்டு பாடவே
இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே
ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரே
இது தாழ்மை என்று நாளும் எண்ணவே
1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ
கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ
கண்ணே உன் கண் மூட பாட்டு
சொல்லித்தர நீர் என்று கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ
தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ
அன்பே என் நெஞ்சில் ஓர் பாட்டு
அருள் கூறும் சங்கீதம் கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
3 இலையில் பனியோ உன் நிலைதான் இன்றோ
இருளில் ஒளியோ எம் மனதின் குறையோ
அன்னாளின் இதயத்தின் ராகம்
மன்னிக்கும் பண்பை நீர் தாரும்
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்