thanthai thanthai thanthai thirumagan தந்தை தந்தை தந்தைத் திருமகன்
தந்தை தந்தை தந்தைத் திருமகன்
இந்த இந்த இந்தத் பூவிதனில்
விந்தை விந்தை மரியிடமே
மைந்தனுருவானார்
சொந்த சிலாக்கியமும் மறந்தார்
நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார்
மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை
சந்ததியாய் பிறந்தார்
பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும்
பேய்கள் நிறைந்த இப்பாரினிலே
பத்தனாந் தாவீது வேரினிலே மனு
புத்திரனாய் பிறந்தார்
ஆயர்கள் கூடி ஏற்றிடவே
ஆச்சர்யத்துடன் போற்றிடவே
நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர்
நீசக்குடில் நீசக்குடில்
வேதமதை நிறை வேற்றவே நாம்
வினை துயர் யாவையு மாற்றவே
தூதர் கூடி புகழ் ஏட்டவே இத்
தொல்லுலகில் பிறந்தார்