aananthap paadalkal paadiduvaen ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே
1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த
3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த
4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த
5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த
6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த