anandham enakku kidaithathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது
ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்
கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
உலகம் முழுவதிலும் கண்டதில்லை
இயேசுவின் அன்பினை போல
என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
இயேசுவை என்றும் தொடர்கின்றது
என்னை அழைத்து நன்மை செய்தார்
எந்நாளும் துதித்திடுவேன்
கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
இயேசு என் மீட்பரானார்