• waytochurch.com logo
Song # 30152

காரியம் வாய்க்குமே


காரியம் வாய்க்குமே

1. எதிர்பாராத சூழ்நிலைகள் வாழ்வில் நெருங்கும் போது
என்ன செய்வதோ ஏது செய்வதோ திகைத்த பொழுதே
பணமில்லையே பொருளில்லையே உதவுவோர் எவருமில்லை
குழந்தைபோல ஊற்றிவிட்டேன் அதிசயம் காண செய்தீர்


காரியம் வாய்க்குமே…காரியம் வாய்க்குமே…
ஆகாதது ஒன்றுமில்லை…கூடாதது ஒன்றுமில்லை…


2. ஆகாரே என்று பெயர் சொல்லி அழைத்த தெய்வம் நீரே
போகாதே என்று சொல்லி சாகாதே என்று சொல்லி
வாழ்வை கொடுத்தவரே
சோதனைகளையும் வேதனைகளையும் அறிந்த தெய்வம் நீரே
கலங்கிடேனே திகைத்திடேனே வல்லகாரியம் செய்திடுவீர்
(காரியம் வாய்க்குமே…)

3. மனதுருகும் தெய்வம் நீரே மனமிரங்கி நடத்திடுவீர்
தவறும்போது கண்டிப்பவரே அடித்தாலும் அணைப்பவரே
கடிந்துகொண்டாலும் கசந்து கொள்ளாத தெய்வம் நீரே
அடிபட்டாலும் காயம்கட்டுபவரே விழுந்தாலும் தூக்கி சுமப்பீர்
(காரியம் வாய்க்குமே…)

4. கூனிக்குறுகி போவதில்ல நாலி நலிந்து போவதில்ல
குப்பையில் இருக்கும் சிறியோரை
சிங்காசனத்தில் உயர்த்திடுவீர்
ஆடுகளுக்காய் ஜீவன் தந்த நல்ல மேய்ப்பன் நீரே
வழிகளிலே காத்திடுவீர் ஸ்தானத்தில் அமர்த்திடுவீர்
(காரியம் வாய்க்குமே…)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com